இலங்கை

2026ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து பிரதேச செயலாளர்களுக்கு விளக்கம்!

2026ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சமூக சக்தி எனினும் தொனிப்பொருளில் கிராமிய அபிவிருத்தி தொடர்பான விளக்கங்கள் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான தெளிவுபடுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் நேற்று கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

சமூக வலுவூட்டல் மற்றும் சமூகத்திற்குள் பொருளாதார நன்மைகள் சமமாகப் பகிரப்படுதலை உறுதி செய்வதற்காக அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமான “சமூக சக்தி” தேசிய செயற்திட்டம் குறித்து நாட்டின் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் விளக்கமளிக்கும் நிகழ்வு, அலரி மாளிகையில் நடைபெற்றது.

சமூக சக்தி செயற்திட்டத்தை கீழ் மட்டத்தில் செயல்படுத்துவது குறித்து பிரதேச செயலாளர்களுக்கு இதன்போது விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

அரச சேவை மறுசீரமைப்பின் அவசியம், அபிவிருத்தி தொடர்பில் பிரதேச செயலாளர்களின் வகிபாகம், சமூக சக்தி செயற்திட்டத்தில் டிஜிட்டல் கட்டமைப்புகள் மற்றும் தளங்களை அறிமுகப்படுத்தல், டிஜிட்டல் பொருளாதார செயற்திட்டத்தில் பிரதேச செயலாளர்களின் வகிபாகம், இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்தல் மற்றும் போதைப்பொருளை ஒழிக்கும் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டிற்கு பிரதேச செயலாளர்களின் தீவிர பங்கேற்பை பெற்றுக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

2026 ஆம் ஆண்டில் சமூக சக்தி உள்ளிட்ட ஏனைய அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் கிராமிய அபிவிருத்திக்காக 180 பில்லியன் ரூபா, இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை

விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான கிழக்கு மாகாண, காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில்
இலங்கை

மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்த கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04.11.2025) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்