உலகம்

விண்கலத்தை அனுப்பிய சீனா: விண்வெளி நிலையத்தில் சிக்கியவர்களை பூமிக்கு திரும்ப…!

விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் தீவிர ஆர்வம் காட்டுகின்றன. இதில் சீனா ஒரு படி மேலே ஏறி 2021-ம் ஆண்டு தியாங்காங் என்ற விண்வெளி நிலையத்தை தனக்கென அமைத்துள்ளது.

சுமார் 390 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள அங்கு சீன விண்வெளி வீரர்கள் தங்கி சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். அதன்படி கடந்த ஏப்ரல் 24-ந் தேதி ஷென்சோ-20 என்ற விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் அனுப்பப்பட்டது.

கடந்த 5-ந் தேதி இந்த விண்கலம் பூமி திரும்ப திட்டமிட்டு இருந்தது. ஆனால் விண்வெளி குப்பை மோதியதால் விண்கலம் சேதமடைந்தது. எனவே அந்த விண்கலம் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனையடுத்து விண்வெளி நிலைய ஆராய்ச்சிக்காக 3 வீரர்களுடன் ஷென்சோ-21 விண்கலம் அனுப்பப்பட்டது. இதனால் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் 3 பேருக்கு பதிலாக 6 பேர் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதன்பிறகு தோங் தலைமையிலான ஷென்சோ-20 குழுவினர் ஷென்சோ-21 விண்கலம் மூலம் கடந்த 14-ந் தேதி பூமி திரும்பினர். சாங் லூ தலைமையிலான ஷென்சோ-21 குழுவினர் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் தொடர்ந்து ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேசமயம் ஷென்சோ-21 குழுவினர் பூமி திரும்ப எந்த விண்கலத்துடனும் இணைக்கப்படவில்லை. இதனால் அவர்களை மீட்க ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-2எப் ராக்கெட் மூலம் ஷென்சோ-22 என்ற விண்கலத்தை சீனா வெற்றிகரமாக நேற்று அனுப்பியது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த