இந்தியா

அரியானாவில் ரூ.1.17 கோடிக்கு ஏலம் போன பேன்சி நம்பர்

எளிய முறையில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் பேன்சி நம்பர் கொண்ட நம்பர் பிளேட்களை வாங்குகின்றனர்.

இந்த வகையிலான பேன்சி நம்பர் அவற்றின் இலக்கங்கள், எழுத்துக்களின் வரிசைகளுக்காக தேர்வு செய்யப்படுகின்றன. இவை தனிப்பட்ட விருப்பத் தேர்வுகள், அதிர்ஷ்ட எண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன.

இதற்கிடையே, வாகனங்களுக்கான பேன்சி நம்பர்களைப் பெறுவதற்கு அரியானா போக்குவரத்து துறை ஆன்லைன் வாயிலாக ஏலம் நடத்துகிறது.

இந்நிலையில், அரியானாவில் ஒவ்வொரு வாரமும் விஐபி மற்றும் பேன்சி எண்கள் ஏலம் நடத்தப்படுகிறது. வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் திங்கள் காலை 9 மணி வரை, ஏலதாரர்கள் தங்களுக்கு விருப்பமான எண்ணுக்கு விண்ணப்பிக்கலாம். பின்னர் புதன்கிழமை மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் வரை ஏலம் நடைபெறும்.

இந்த ஏலம் அதிகாரப்பூர்வ fancy.parivahan.gov.in போர்ட்டலில் முழுவதுமாக ஆன்லைனில் நடைபெறுகிறது. இந்த வாரம், ஏலத்திற்கு வந்த அனைத்து எண்களிலும், HR88B8888 என்ற பதிவு எண்ணின் அடிப்படை ஏல விலை ரூ. 50,000 என நிர்ணயிக்கப்பட்டது. இது ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்துக்கொண்டே இருந்தது, பின்னர் மாலை 5 மணிக்கு ரூ. 1.17 கோடிக்கு முடிவு செய்யப்பட்டது.

இதன் மூலம் HR88B8888 என்ற எண் இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த கார் பதிவு எண்ணாக ரூ.1.17 கோடிக்கு மாறியுள்ளது.

இதுபோன்ற எண்களை பெரும்பாலும் அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் ஏலத்தில் எடுப்பதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்