உலகம்

ஆப்கானிஸ்தானியருக்கான விசாவை நிறுத்தியது அமெரிக்கா!

அமெரிக்க தேசிய காவல்படை வீரர்கள் மீது ஆப்கனை சேர்ந்தவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, ஆப்கானிஸ்தானியர்களுக்கான விசா வழங்கும் நடைமுறைகளை காலவரையின்றி நிறுத்தி வைக்க அமெரிக்க வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே, அந்நாட்டு தேசிய காவல் படையை சேர்ந்த இருவர் மீது, தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் சமீபத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதில், வீராங்கனை ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதை பயங்கரவாத செயல் என கூறியதுடன், இது முழு நாட்டிற்கான குற்றம் என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மூன்றாம் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறுபவர்களுக்கு நிரந்தர தடை விதிக்க முடிவு செய்துள்ளதாகவும் டிரம்ப் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க குடியேற்றத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஆப்கானிஸ்தானியர்களின் குடியேற்ற விண்ணப்பங்கள் மற்றும் நடைமுறைகள் அனைத்தும் உடனடியாகவும், மறு ஆய்வு முடியும் வரை காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த ஆட்சியில் ஜோ பைடன் நிர்வாகத்தின் போது அமெரிக்காவுக்கு வந்த ஒவ்வொரு வெளிநாட்டவர் குறித்தும் மறு ஆய்வு செய்ய அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த