இந்தியா

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வருகிற டிசம்பர் 9ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முதலில், தவெக சார்பில் கோரப்பட்ட சாலை பேரணிக்கு, சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக காவல்துறை அனுமதி மறுத்தது. இருப்பினும், பொதுக்கூட்டம் நடத்த அரசு அனுமதி அளிப்பதாக தெரிவித்தது.

இதையடுத்து, தவெக சார்பில் டிசம்பர் 9ஆம் தேதி உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் மைதானத்தை ஆய்வு செய்த பின்னர், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கான அனுமதி கடிதத்தை, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இன்று புதுவை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் என். ரங்கசாமியை நேரில் சந்தித்து பெற்று கொண்டார். இதன் மூலம், திட்டமிட்டபடி புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம் நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்