இந்தியா

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோயிலில் சுமார் ரூ. 29 கோடியில் புனரமைக்கப்பட்ட பணிகள் நிறைவடைந்ததையடுத்து, டிசம்பர் 8 ஆம் தேதி காலை 5.45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இந்த மத நிகழ்வைக் கருத்தில் கொண்டு, பக்தர்கள் வருகை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 149 பள்ளிகளுக்கு மட்டும் டிசம்பர் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கும்பாபிஷேக ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்காமல், குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கும் இந்த நடவடிக்கை, சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்