இந்தியா

அனல் பறக்கப்போகும் SIR மீதான விவாதம் – ராகுல் தலைமையில் குழு ரெடி!

வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு திருத்தம் குறித்த முக்கியமான விவாதம் செவ்வாய்க்கிழமை மக்களவையில் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சிகள் கோரிய விவாதத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமை தாங்குவார்.

இந்த விவாதத்தில் ராகுல் தலைமையின்கீழ் காங்கிரஸ் தலைவர்கள் வேணுகோபால், மணீஷ் திவாரி, வர்ஷா கெய்க்வாட், முஹம்மது ஜாவேத், உஜ்வல் ராமன் சிங், இஷா கான் சவுத்ரி, மல்லு ரவி, இம்ரான் மசூத், கோவல் பதி, ஜோதிமணி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த முழு விவாதத்திற்கும் மொத்தம் 10 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

விவாதத்தின் போது, ராகுல் காந்தி வாக்கு மோசடி மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் நமபகத்தன்மை குறித்த பிரச்சினையை எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது வாக்குச் சாவடி நிலை அதிகாரிகள் மீது சுமத்தப்படும் அழுத்தம் குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்