14-வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி சென்னை, மதுரையில் நடைபெற்று வருகிறது. கடந்த 28-ந் தொடங்கிய இந்த போட்டியில் நாக் அவுட்டான கால் இறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.
2 முறை சாம்பியனான இந்திய அணி பெல்ஜியத்தை வீழ்த்தி 7-வது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
போட்டியின் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது. இதனால் வெற்றி- தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்- அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 4- 3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய அணி அரை இறுதியில் 7 தடவை உலக கோப்பையை கைப்பற்றிய ஜெர்மனியை எதிர்கொண்டது. சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடமாகியது.
ரோகித் தலைமையிலான இந்திய அணி ஜெர்மனியை தோற்கடித்து 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் 4 சுற்றுகள் முடிவில் 5-1 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி ஜெர்மனி வீழ்த்தியது. இதன் மூலம் ஜெர்மனி அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியை ஜெர்மனி எதிர்கொள்ள உள்ளது. வரும் 10 ஆம் தேதி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

