இந்தியா

ஆனந்த் அம்பானியின் வனவிலங்கு மையத்தில் மெஸ்ஸி.. யானையுடன் கால்பந்து விளையாடினார்..!

உலகப்புகழ் பெற்ற கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, ஆனந்த் அம்பானி குஜராத்தின் ஜாம்நகரில் உருவாக்கியுள்ள ‘வந்தாரா’ வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்கு சிறப்பு வருகை தந்தார். இந்திய பாரம்பரிய கலாச்சாரமும் நவீன அறிவியல் தொழில்நுட்பமும் இணைந்து விலங்குகளை பாதுகாக்கும் விதத்தை கண்டு அவர் வியப்படைந்தார்.

மெஸ்ஸியுடன் அவரது சக வீரர்களான லூயிஸ் சுவாரஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் ஆகியோரும் வந்திருந்தனர். வந்தாராவின் வழக்கப்படி, சனாதன தர்ம முறைப்படி மகா ஆரத்தி மற்றும் பல்வேறு பூஜைகளில் கலந்துகொண்டு மெஸ்ஸி வழிபட்டார். பின்னர், அங்கிருந்த சிங்கம், புலி மற்றும் யானைகள் பராமரிப்பு மையங்களை பார்வையிட்டார்.

இந்த வருகையின் நெகிழ்ச்சியான தருணமாக, ஆனந்த்-ராதிகா தம்பதியினர் ஒரு சிங்கக்குட்டிக்கு மெஸ்ஸியின் நினைவாக ‘லியோனல்’ எனப் பெயரிட்டனர். மேலும், ‘மணிக்லால்’ என்ற யானை குட்டியுடன் மெஸ்ஸி கால்பந்து விளையாடியது அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்