வட இந்தியாவில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான கிரிக்கெட் போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பிசிசிஐ-யை வலியுறுத்தியுள்ளார்.
லக்னௌவில் நடைபெறவிருந்த நான்காவது டி20 போட்டி அடர் பனிமூட்டம் மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
வட இந்தியாவில் குளிர்காலத்தில் காற்று மாசு மற்றும் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் போட்டிகள் பாதிக்கப்படுகின்றன. ஆனால், தென்னிந்தியாவில் இத்தகைய வானிலை சிக்கல்கள் இல்லை என்பதால், அங்கு போட்டிகளை நடத்தினால் ரசிகர்களும் வீரர்களும் தடையின்றி விளையாட்டை ரசிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
வானிலை நிலவரத்தை முன்கூட்டியே கணித்து பிசிசிஐ ஏன் போட்டிகளை தென்னிந்தியாவிற்கு ஒதுக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாளை அகமதாபாதில் இறுதிப் போட்டி நடைபெறவுள்ள நிலையில், சசி தரூரின் இந்த பேச்சு கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

