இந்தியா

வரைவு வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய அளவில் குளறுபடிகள் நடந்துள்ளது: மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய அளவில் குளறுபடிகள் நடந்துள்ளதாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், தேர்தல் ஆணையம் முழுமையாக பாஜகவின் வழிகாட்டுதலின்படி செயல்படுவதாக சாடினார்.

மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிரத் திருத்த பணிக்குப் பிறகு, சுமார் 58 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதனால் வாக்காளர்களின் எண்ணிக்கை 7.66 கோடியிலிருந்து 7.08 கோடியாக குறைந்துள்ளது. மாநில அரசுக்கு தெரிவிக்காமல் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்தது மற்றும் உள்ளூர் மொழி தெரியாத அதிகாரிகளை கொண்டு இப்பணிகளை மேற்கொண்டதே இவ்வளவு பெரிய குளறுபடிக்கு காரணம் என்று அவர் தெரிவித்தார்.

இரண்டு ஆண்டுகள் செய்ய வேண்டிய பணியை வெறும் இரண்டு மாதங்களில் அவசரகதியில் முடித்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். குறிப்பாக, சிறுபான்மையின மக்கள் மற்றும் சில குறிப்பிட்ட பிரிவினரின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மம்தா, விடுபட்ட தகுதியுள்ள வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்