இந்தியா

ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தானில் இருந்து வீசப்பட்ட ஆயுதங்கள்.. பெரும் பரபரப்பு..!

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி இந்திய ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான பை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த பையை சோதித்ததில், அதனுள் ஏராளமான துப்பாக்கி குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் கொண்டு வரப்பட்ட இந்த ஆயுதங்கள், இலக்கை அடையாமல் தவறி கீழே விழுந்திருக்கலாம் என்று ராணுவ தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக 35 வயதான இஷாத் என்பவர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து பாகிஸ்தான் கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிடிபட்ட நபர் பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்டாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதே வேளையில், முதற்கட்ட விசாரணையில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் ஒரு தரப்பினர் கூறுவதால், இது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்