வங்கதேசத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், ஐபிஎல் போட்டிகளை அந்த நாட்டில் ஒளிபரப்ப அந்நாட்டு தற்காலிக அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ஒரு வங்கதேச வீரரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் நீக்க வேண்டும் என்று பிசிசிஐ வலியுறுத்தியதாக கூறப்படும் தகவல்களே இந்த தடைக்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.
சமீபகாலமாக இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே கிரிக்கெட் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், வங்கதேசத்தை சேர்ந்த முஸ்தஃபிசுர் என்ற வீரரை ஐபிஎல் போட்டியில் இருந்து நீக்க வற்புறுத்தியது அந்நாட்டு ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதற்குப் பதிலடியாக, ஐபிஎல் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு உரிமம் பெற்ற சேனல்களுக்கு வங்கதேச தகவல் தொடர்புத் துறை தற்காலிக தடை விதித்துள்ளது.
இந்தத் தடையால் வங்கதேசத்தில் உள்ள லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

