கனடா

தேவாலயத்தில் குழந்தையை கைவிட்ட தாய்!

ரொரன்ரோவின் மிட்டவுன் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் பிறந்த குழந்தையைக் கைவிட்டதாகக் கூறப்படும் பெண் மீது தற்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குழந்தையின் அடையாளத்தைப் பாதுகாக்கும் நோக்கில், குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. குழந்தையைக் கைவிடுதல் மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அத்தியாவசியத் தேவைகளை வழங்காமை ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த டிசம்பர் 21ஆம் திகதி, காலை 10:40 மணியளவில், யோங் வீதி மற்றும் புரோட்வே அவென்யூ பகுதிக்கு அருகில் குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக ரொரன்ரோ பொலிஸாருக்கு அழைப்பு கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், பிறந்த குழந்தையை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர், குழந்தையின் தாயும் கண்டுபிடிக்கப்பட்டார்.

தாய் மற்றும் சேய் இருவரும் வைத்தியசாலையில் பராமரிப்பு பெற்று வருவதாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஸ்டெபானி மிசெலி தெரிவித்தார். இந்த வழக்குத் தொடர்பான மேலதிக விபரங்களை வெளியிட பொலிஸார் மறுத்துவிட்டனர்.

இந்தச் சம்பவம் 44 புரோட்வே அவென்யூவில் அமைந்துள்ள புனித மோனிக்கா கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து தேவாலயத்தைத் தொடர்பு கொண்டபோது, இந்த வழக்கு பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு தேவாலயத்தின் செயலாளர் பதிலளித்தார். சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

கனடா

சுவீடன் மன்னர் கனடா விஜயம்

சுவீடன் மன்னர் கார்ல் XVI கஸ்டாஃப் மற்றும் மகாராணி சில்வியா நவம்பர் 18ஆம் திகதி கனடாவுக்கு விஜயம் செய்யஉ ள்ளனர். கனடா ஆளுநர் நாயகம் மேரி சைமன்
கனடா

கனடாவில் ஹாலோவின் இனிப்பு பையில் தங்க மோதிரம்

கனடாவின் வின்னிபிக் பகுதியில் ஹாலோவின் இனிப்பு பண்டங்கள் காணப்பட்ட பையொன்றில் தங்க மோதிரம் ஒன்று, பெண்ணுருவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. தனது மகளின் ஹாலோவின் இனிப்பு பண்ட பொதியில் இவ்வாறு