ஆண் குழந்தை வேண்டும் என்ற தீராத ஆசையினால், வரிசையாக 10 பெண் குழந்தைகளை பெற்றெடுத்த ஹரியானா தம்பதிக்கு, தற்போது 11-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. 19 ஆண்டுகளில் 11 குழந்தைகளை பெற்றுள்ள இந்த தம்பதியின் விடாமுயற்சி அந்தப் பகுதியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
தொடர்ச்சியாக பெண் குழந்தைகளே பிறந்ததால், பெயர்களை சூட்டுவதில் குழப்பம் அடைந்த தந்தை, தனது பல மகள்களுக்கு ‘லட்சுமி’ என்றே பெயரிட்டுள்ளார். தனது 10 மகள்களின் பெயர்களை வரிசையாகக் கூறும் அளவிற்குத் தனக்கு நினைவுத்திறன் இல்லை என்றும் அவர் வேடிக்கையாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது 11-வது பிரசவத்தில் ஆண் வாரிசு பிறந்ததை அடுத்து, அந்த குடும்பமே பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறது. இத்தம்பதியின் மூத்த மகள் தற்போது 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். “இனிமேல் குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டோம்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள தந்தை, இதுவே தனது வாழ்வின் மறக்க முடியாத தருணம் என்று நெகிழ்ந்துள்ளார்.

