தமிழ் திரையுலகில் பிப்ரவரி மாதம் ஒரு மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் மோதலுக்கு தயாராகி வருகிறது. நடிகர் சூர்யாவின் அதிரடி படைப்பான ‘கருப்பு’ திரைப்படம் பிப்ரவரி 19 அல்லது 20 ஆகிய தேதிகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. இதே தேதியில், நீண்ட நாட்களாக காத்திருப்பில் இருக்கும் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தையும் ரிலீஸ் செய்யப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் மோதுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் நீதிமன்ற சிக்கல்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஒருவேளை சட்ட போராட்டங்களுக்கு பிறகு ‘ஜனநாயகன்’ பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிப்போனால், திரையரங்குகள் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்படும்.
அத்தகைய சூழலில், சூர்யா மற்றும் விக்ரம் ஆகிய இருவரின் படங்களின் ரிலீஸ் தேதிகளும் மீண்டும் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ‘ஜனநாயகன்’ வரும் பட்சத்தில், மற்ற பெரிய படங்கள் தங்களது வெளியீட்டை தள்ளிவைக்கவே விரும்பும் என விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் பிப்ரவரி மாத சினிமா அட்டவணை தற்போது ஒரு நிலையற்ற சூழலிலேயே உள்ளது.

