விளையாட்டு

உலகக்கோப்பையை தவிர்ப்போம் என கூறிவிட்டு அணியை அறிவித்த பாகிஸ்தான்

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

யாரும் எதிர்பாராத விதமாக, நட்சத்திர வீரர் பாபர் அசாம் அணியில் நீடித்தாலும், சல்மான் அலி ஆகா அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் ஷாகீன் அப்ரிடி, சாய்ம் அயூப் போன்ற முன்னணி வீரர்களும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இந்த உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்தியா, அமெரிக்கா, நமீபியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுடன் ‘குரூப் ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பிப்ரவரி 7-ஆம் தேதி கொழும்பில் நடைபெறும் தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. குறிப்பாக, பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் மோதல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

வங்கதேசத்தை நீக்கியதால் உலகக்கோப்பையை தவிர்ப்போம் என பாகிஸ்தான் ஒருபக்கம் கூறிவிட்டு, இன்னொரு பக்கம் அணியை அறிவித்துள்ளது முரண்பாட்டின் மொத்த உருவமாக பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்