டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவின் ஸ்வாட் படையில் கமாண்டோவாக பணியாற்றி வந்த 27 வயது கஜல், தனது கணவரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி 22-ம் தேதி இரவு நடந்த குடும்பத் தகராறில், அவரது கணவர் அங்குர் ஆத்திரத்தில் கஜலின் தலையை கதவில் மோதியதுடன், உடற்பயிற்சி செய்யும் ‘டம்பல்’ கொண்டு பலமாக தாக்கியுள்ளார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கஜல், சிகிச்சை பலனின்றி ஜனவரி 27-ம் தேதி உயிரிழந்தார். கஜல் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது இந்த துயரத்தை இன்னும் அதிகமாக்கியுள்ளது.
அங்குர் எனது மகளை மட்டும் கொல்லவில்லை, பிறக்காத குழந்தையையும் கொன்று ஒரே நேரத்தில் இரண்டு கொலைகளை செய்துள்ளார்” என்று கஜலின் தந்தை கண்ணீர் மல்க கூறியுள்ளார். 2023-ல் கமாண்டோவாக தேர்வான கஜல், பாதுகாப்பு அமைச்சகத்தில் எழுத்தராகப் பணிபுரியும் அங்குரை 2023-ல் திருமணம் செய்தார்.
திருமணமான 15 நாட்களிலேயே கார் மற்றும் வரதட்சணை கேட்டு கஜலை அங்குர் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்த தொடங்கியதாக கூறப்படுகிறது.

