இந்தியா

எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராகும் வாய்ப்பே இல்லை.. முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் உரையாற்றும்போது, வரவிருக்கும் தேர்தலில் திமுக மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராகும் வாய்ப்பே இல்லை என்று குறிப்பிட்ட அவர், அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் போனதை சுட்டிக்காட்டினார். ஆனால், திமுக அரசு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியது மட்டுமின்றி, சொல்லாத பல முத்திரை திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளதாக அவர் பெருமிதம் கொண்டார்.

குறிப்பாக, அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை தற்போதைய அரசு சாத்தியமாக்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். “மனமிருந்தால் மார்க்கமுண்டு” என்பதற்கு ஏற்ப, மற்றவர்களால் முடியாது என்று சொல்லப்பட்டதை திமுக செய்து காட்டியுள்ளதாக அவர் கூறினார்.

‘திராவிட மாடல் 2.0’ ஆட்சியின் கீழ் மேலும் பல கனவுத் திட்டங்களை நிறைவேற்ற தயாராக இருப்பதாகவும், மக்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியே தனக்கு மிகப்பெரிய ஊக்கம் என்றும் முதல்வர் ஸ்டாலின் சிவகங்கையில் சூளுரைத்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்