உலகம்

ரகசியமாக சிறையில் இருந்து வெளியே வந்தாரா இம்ரான்கான்?

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சுமார் 32 மாத சிறைவாசத்திற்கு பிறகு முதன்முறையாக மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இம்ரான்கான் கண்கள் தொடர்பான தீவிர சிகிச்சைக்காக இந்த முடிவை ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு எடுத்துள்ளது. இம்ரான் கானின் உடல்நிலை குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், அமைச்சர் தாரிக் ஃபசல் சவுத்ரி இந்த முக்கிய அறிவிப்பை சனிக்கிழமை வெளியிட்டார்.

சிறைத்துறையினரின் கூற்றுப்படி, இம்ரான் கானுக்கு இதுவரையிலான வழக்குகளில் சட்டப்பூர்வ நிவாரணம் ஏதும் கிடைக்கவில்லை. இருப்பினும், அவரது கண்பார்வையில் 85 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், சிறப்பு மருத்துவ வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்படுகிறார்.

இதற்கிடையில், அவரை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், இது ஏதோ ஒரு ‘டீல்’ அடிப்படையில் நடக்கிறதா என்றும் அரசியல் வட்டாரங்களில் விவாதிக்கப்படுகிறது. இம்ரான்கான் கட்சியினர் அவர் முழுமையாக குணமாகும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த