இந்தியா

திமுகவில் மகனுக்கு சீட்!.. ஓபிஎஸ் போடும் பக்கா ஸ்கெட்ச்!.. கோபத்தில் ஈபிஎஸ்

அதிமுக ஆட்சியில் மூன்று முறை முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். கடந்த 2022 ஆம் வருடம் பழனிச்சாமியால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற இயக்கத்தை தொடங்கி அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அது நடக்கவில்லை.

அவர் அணியில் இருந்த எல்லோரும் ஒவ்வொருவராக ஒவ்வொரு கட்சிக்கு சென்று விட்டார்கள். தற்போது ஓபிஎஸ் தனித்துவிடப்பட்டிருக்கிறார். இந்நிலையில்தான், நேற்று சட்டசபையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து பேசினார் ஓபிஎஸ். இதுபற்றி செய்தியாளிடம் பேசிய ஓபிஎஸ் ‘இந்த முறையும் திமுகவே ஆட்சி அமைக்கும்.. 5 ஆண்டுகளில் பல சாதனைகளை செய்திருக்கிறார்கள்’ என ஓப்பனாக பேட்டி கொடுத்தார்.

திடீரென ஓ.பன்னீர்செல்வம் ஏன் திமுகவை ஆதரிக்கிறார் என்கிற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும் நிலையில் அதன் பின்னணி தற்போது தெரிய வந்திருக்கிறது..அதிமுகவில் இணையும் முயற்சியை எடப்பாடி பழனிச்சாமி முறியடித்து விட்டார்.. சரி அதிமுக, பாஜக இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய முயற்சி செய்தால் அதுவும் நடக்கவில்லை.

எனவேதான் எடப்பாடி பழனிச்சாமிகு எதிராக அரசியல் செய்ய முடிவு செய்திருக்கிறாராம் பன்னீர்செல்வம். அதனால்தான் திமுகவுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். இந்த முறை திமுக வேட்பாளராக தனது தனது மகன் ஜெய் பிரதீப்புக்கு தேனி மாவட்டத்தில் ஒரு தொகுதியை கேட்க திட்டமிட்டிருக்கிறாராம் பன்னீர்செல்வம். அதேநேரம் 2026 தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடப் போவதில்லை எனவும் சொல்கிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்