உலகம்

பாகிஸ்தானின் வான்வழி தாக்குதல்.. பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் பலி..!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய அதிரடி வான்வழி தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏராளமான ஆப்கானிய பொதுமக்கள் கொல்லப்பட்டும், காயமடைந்தும் உள்ளனர்.

பாகிஸ்தானில் சமீபகாலமாக அதிகரித்து வரும் தற்கொலை படை தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்புகளே காரணம் என்று இஸ்லாமாபாத் குற்றம் சாட்டியுள்ளது.

குறிப்பாக ரமலான் மாத தொடக்கத்தில் இஸ்லாமாபாத் மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததற்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.

2021-ல் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தது முதல் இரு நாடுகளுக்கும் இடையே எல்லை போர் மற்றும் பயங்கரவாதம் குறித்த மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த