பாலிவுட் நடிகை டாப்ஸி மற்றும் கங்கனா ரணாவத் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வருவதாக கூறப்படும் நிலையில், அது குறித்து டாப்ஸி தற்போது விளக்கமளித்துள்ளார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய டாப்ஸி ’கங்கனாவுடன் தனக்கு எந்தவிதமான நேரடி சண்டையும் இல்லை என்று திட்டவட்டமாக கூறினார். தாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் எங்கும் தவறாக பேசவில்லை என்றும், மக்கள் அப்படி நினைப்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சி என்றால் அப்படியே நினைத்து கொள்ளட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உண்மையில் கங்கனாவின் சகோதரி ரங்கோலி சாண்டல் தான் தன்னை சீண்டியதாக தெரிவித்த டாப்ஸி , சில ஆண்டுகளுக்கு முன் ரங்கோலி தன்னை ‘மலிவான நகல்’ என்று விமர்சித்ததை சுட்டிக்காட்டினார். டாப்ஸி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஆசிஸ்’ திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், அவரின் இந்த வெளிப்படையான விளக்கம் திரைத்துறையில் கவனத்தைப் பெற்றுள்ளது.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

