இந்தியா

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு காலமானார்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாகவே சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வயது மூப்பு மற்றும் உடல்நிலை காரணமாக அவருக்கு தொடர் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தது.

மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்துவந்தனர். ஆனாலும், அவரின் உடல்நிலை மோசமடைந்ததாகவும் நல்லக்கண்ணுவுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறினார். இந்நிலையில்தான், தற்போது சிகிச்சை பலனின்றி தோழர் நல்லக்கண்ணு மரணமடைந்திருக்கிறார்.

தமிழக அரசியலில் முதல் தலைமுறை தலைவர் நல்லக்கண்னு. சுதந்திர போரட்டத்தில் கலந்துகொண்டவர் இவர். மிகவும் எளிமையானவர். இறுதிக்காலம் வரை பணம், பதவிகளுக்கு ஆசைப்படாதவ்வர். வாழ்நாள் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், சாதிய கொடுமைகளுக்கு எதிராகவும் போராட்டி வந்தார்., இதனால், வாழ்வில் பெரும்பாலான பகுதி நல்லக்கண்ணு சிறையில் கழித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பல பதவிகளை இவர் வகித்தார். நல்லக்கண்ணுவின் மரணத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்