தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.. ஏனெனில் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு, 40 தொகுதிகள், இரண்டு ராஜ்யசபா சீட் என பல டிமாண்ட்களை காங்கிரஸ் முன் வைத்திருக்கிறது. ஆனால் இது எதையுமே கொடுக்க திமுக மறுக்கிறது.. 20 முதல் 25 தொகுதிகள் வரை மட்டுமே காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும்.. ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க முடியாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது.
எனவே விஜயின் தமிழக வெற்றி கழகத்திடம் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக இன்று காலை முதலே செய்திகள் வெளியாகி வருகிறது.. அதுவும் டெல்லியில் இருந்து காங்கிரஸ் பிரமுகர்கள் விஜயிடம் பேசுவதாகவும் செய்திகள் கசிந்தது. குறிப்பாக சமீபத்தில் சென்னை வந்த கிரிஷ் சோடங்கர் தவெகவும் எங்களுடன் பேசி வருகிறார்கள் எனக் கூறியிருந்தார்.
ஒருபக்கம், தொகுதி பங்கட்டில் உடன்பாடு ஏற்படாததால்தான் இதுவரை திமுக காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என சொல்லப்படுகிறது.. இதுபற்றி கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை ‘தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுகவுடன் மட்டுமே நாங்கள் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.. வேறு யாரிடமும் நாங்கள் பேசவில்லை.. திமுக காங்கிரஸ் கூட்டணி இணக்கமாகத்தான் இருக்கிறது.. கிரிஷ் சோடங்கர் சொன்னது அவரின் சொந்த கருத்து.. காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல’ என கூறியிருக்கிறார்.

