தெலங்கானா மாநிலம் உருவான 2014-ம் ஆண்டை விட, தற்போது அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியச் செலவு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
தற்போது மாதம் ஒன்றுக்குச் சுமார் ரூ.6,000 கோடி அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய செலவாக செலவிடப்படுகிறது. மின் வாரிய தலைமை பொறியாளர்கள் ரூ.7 லட்சம் வரையிலும், மூத்த துப்புரவுப் பணியாளர்கள் ரூ.2 லட்சம் வரையிலும் ஊதியம் பெறுவதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
2023-24 சிஏஜி அறிக்கையின்படி, மாநில வருவாயில் 45% ஊதியம், ஓய்வூதியம் மற்றும் கடன் வட்டிக்கே செலவாகிறது. ஜனவரி 2026 நிலவரப்படி அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் 33.67% ஆக உள்ளது.
இருப்பினும், மாநிலத்தின் ஜிஎஸ்டிபி வளர்ச்சி 10%-க்கு மேல் இருப்பதாலும், தனிநபர் வருமானம் உயர்ந்து வருவதாலும் இந்த செலவுகளை சமாளிக்க முடிவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2025-26 பட்ஜெட்டில் வருவாய் ரூ.2.30 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

