தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். 1999ம் வருடம் லண்டனையைச் சேர்ந்த சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் விஜய். அவர்களுக்கு ஒரு மகன், மகள் என அழகிய குடும்பம்.
திருமணத்திற்கு பின் விஜய் நடிக்கும் திரைப்படங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளில் சங்கீதா தொடர்ந்து கலந்து கொண்டு வந்தார். ஆனால் கடந்த பல வருடங்களாகவே விஜயின் திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிகளில் சங்கீதாவை பார்க்க முடியவில்லை. ஒரு பக்கம் விஜய் தனித்து வாழ்வதாக செய்திகள் வெளியாகி வந்தது.
இந்நிலையில்தான், விஜயின் மனைவி சங்கீதா விஜயிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்.சென்னை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்திருக்கிறார் சங்கீதா. இந்த வழக்கு விசாரணை வருகிற ஏப்ரல் 20ம் தேதி நடக்கவுள்ளது. எனவே, அந்த நாளில் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டிருக்கிறது.
இந்த விவகாரம் விஜய் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

