விளையாட்டு

டி20 உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு.. இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் பரிதாப நிலைமை..!

டி20 உலகக்கோப்பை 2026 தொடரில், நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி, பாகிஸ்தானின் அரையிறுதி நம்பிக்கையை தக்கவைத்துள்ளது.

குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட நிலையில், நியூசிலாந்தின் தோல்வி சல்மான் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு கதவுகளை திறந்துவிட்டுள்ளது.

தற்போது நியூசிலாந்து 3 புள்ளிகளுடன் தனது ஆட்டங்களை முடித்துள்ளது. ஒரு புள்ளியுடன் இருக்கும் பாகிஸ்தான், இன்று நடைபெறும் இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் 3 புள்ளிகளைப் பெறும். ஆனால், நியூசிலாந்தின் நிகர ரன் ரேட்டை விட அதிக ரன் ரேட் பெற, பாகிஸ்தான் இலங்கையை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும் அல்லது 13.1 ஓவர்களில் இலக்கை எட்ட வேண்டும்.

ஒருவேளை மழை காரணமாக போட்டி ரத்தானால், நியூசிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெறும். பாகிஸ்தானின் தலைவிதி இப்போது இலங்கையுடனான அந்த ஒரு வெற்றியை பொறுத்தே அமைந்துள்ளது. அதேபோல் மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் வென்றால் மட்டுமே இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறும் என்ற நிலை உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்