டி20 உலகக்கோப்பை 2026 தொடரில், நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி, பாகிஸ்தானின் அரையிறுதி நம்பிக்கையை தக்கவைத்துள்ளது.
குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட நிலையில், நியூசிலாந்தின் தோல்வி சல்மான் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு கதவுகளை திறந்துவிட்டுள்ளது.
தற்போது நியூசிலாந்து 3 புள்ளிகளுடன் தனது ஆட்டங்களை முடித்துள்ளது. ஒரு புள்ளியுடன் இருக்கும் பாகிஸ்தான், இன்று நடைபெறும் இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் 3 புள்ளிகளைப் பெறும். ஆனால், நியூசிலாந்தின் நிகர ரன் ரேட்டை விட அதிக ரன் ரேட் பெற, பாகிஸ்தான் இலங்கையை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும் அல்லது 13.1 ஓவர்களில் இலக்கை எட்ட வேண்டும்.
ஒருவேளை மழை காரணமாக போட்டி ரத்தானால், நியூசிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெறும். பாகிஸ்தானின் தலைவிதி இப்போது இலங்கையுடனான அந்த ஒரு வெற்றியை பொறுத்தே அமைந்துள்ளது. அதேபோல் மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் வென்றால் மட்டுமே இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறும் என்ற நிலை உள்ளது.

