மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் துபாய் மற்றும் அபுதாபி உள்ளிட்ட வளைகுடா நாடுகளை தாக்கின. உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையம் இந்த தாக்குதலில் சேதமடைந்தது. இதில் நான்கு பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், துபாயின் அடையாளமாக திகழும் ஏழு நட்சத்திர ஹோட்டலான ‘புர்ஜ் அல் அரப்’ கட்டிடத்தின் ஒரு பகுதியில், இடைமறிக்கப்பட்ட ட்ரோன் பாகங்கள் விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டது.
அபுதாபி சர்வதேச விமான நிலையத்திலும் நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், ஏழு பேர் காயமடைந்ததாகவும் முதற்கட்டத் தகவல்கள் வெளியாகின.
துபாயின் ஜெபல் அலி துறைமுகத்திலும் ஏவுகணை பாகங்கள் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த தாக்குதலை தொடர்ந்து, மத்திய கிழக்கின் வான்வெளி பகுதி போர்க்களமாக மாறியுள்ளதால், துபாய் மற்றும் அபுதாபி நோக்கிய அனைத்து விமான சேவைகளும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஈரானின் இந்த தாக்குதல் வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

