உலகம்

பழிக்கு பழி!..இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்!.. உயிர் தப்பினாரா நெதன்யாகு?..

அணு ஆயுதம் தொடர்பான பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால் இரண்டு நாட்களுக்கு முன்பு ஈரான் நாட்டின் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் போர் தொடுத்தது.. அதில் ஈரான் அதிபர் கமேனி கொல்லப்பட்டார்.. இது ஈரானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையடுத்து சவுதி அரேபியா, பஹ்ரைன், அபுதாபி போன்ற வளைகுடா நாடுகளில் அமெரிக்க ராணுவ தளம் அமைந்திருக்கும் இடங்களையும் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.. மேலும், துபாயில் ஒரு நட்சத்திர ஹோட்டல் மற்றும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அரோம்கா மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அலுவலகம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில் பிரதமர் அலுவலகத்தில் என்ன சேதம்? நெதன்யாவுக்கு ஏதேனும் ஆயிற்றா? என்கிற தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இஸ்ரேல் பிரதமரின் அலுவலகமே தாக்கப்பட்ட சம்பவம் உலக நாடுகளிடமும், இஸ்ரேல் நாட்டு மக்களிடமும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது..

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மட்டுமல்லாமல் விமானப்படை தளபதி அலுவலங்களையும் தாக்கியதாக ஈரான் தெரிவித்திருக்கிறது. அதோடு அமெரிக்கா, இஸ்ரேலுக்கு நேசக்கரம் நீட்டும் வளைகுடா நாடுகளின் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்படும் எனக் கூறி, ட்ரோன் ஆயுதகிடங்கு தொடர்பான வீடியோவையும் வெளியிட்டு ஈரான் எச்சரித்திருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த