இந்தியா

மாதம் 12,000 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கும் ராபிடோ ஓட்டுநர் .. ஆனால் வங்கி கணக்கில் 300 கோடி பரிமாற்றம்..

மாதம் 12,000 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் ஒரு ராபிடோ ஓட்டுநரின் வங்கி கணக்கில் நடந்த 300 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம், அகமதாபாத்தில் 550 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு மாபெரும் நிதி மோசடியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், பிரதீப் ஓடே என்ற அந்த ஓட்டுநர் தனது வங்கி கணக்கை 25,000 ரூபாய்க்கு வாடகைக்கு விட்டது தெரியவந்தது.

இந்த கணக்கை பயன்படுத்தி ‘பிரதீப் என்டர்பிரைசஸ்’ உள்ளிட்ட போலி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, சட்டவிரோத கிரிக்கெட் பெட்டிங் மற்றும் பங்குச்சந்தை முறைகேடுகளுக்கான பணம் பரிமாறப்பட்டுள்ளது.

மோசடிக்காரர்கள் ஹவாலா வழிகளை பயன்படுத்தியதோடு, பங்குச்சந்தையில் ‘சர்குலர் டிரேடிங்’ மூலம் விலைகளை செயற்கையாக உயர்த்தியுள்ளனர். மேலும், இம்பாக்ட் குரு மூலம் போலி நன்கொடைகள் வழங்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சதித்திட்டத்தில் ஒரு தொழிலதிபர் மற்றும் பல போலி அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. பொருளாதார குற்றப்பிரிவினர் தற்போது பணப் பரிமாற்றத்தின் முழுப் பின்னணியையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்