இந்தியா

தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி திடீர் மாற்றம்.. மம்தா பானர்ஜிக்கு ஆரம்பித்தது தலைவலி..!

தமிழ்நாட்டின் ஆளுநராக பணியாற்றி வந்த ஆர்.என்.ரவி, தற்போது மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். மேற்கு வங்க ஆளுநராக இருந்த சி.வி. அனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, ஆர்.என். ரவி அந்த பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு, தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே பல்வேறு நிர்வாக விவகாரங்களில் நீண்டகாலமாக தொடர் மோதல் போக்கு நிலவி வந்தது. இத்தகைய அரசியல் சூழலில், இந்தத் திடீர் மாற்றம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில், மாநிலத்திற்கு ஒரு முழுநேர ஆளுநரை மத்திய அரசு எப்போது நியமிக்கும் என்ற எதிர்பார்ப்பும் கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. தற்காலிகமாக கூடுதல் பொறுப்பின் கீழ் தமிழக ஆளுநர் மாளிகை செயல்பட தொடங்கியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்