உலகம்

கச்சா எண்ணெய்!.. இனிமே ரேட் அதிகம்!.. நேரம் பார்த்து காலை வாரும் ரஷ்யா!

இந்தியா கடந்த பல வருடங்களாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வந்தது. ஆனால் அதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்ததால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தப்பட்டது. ஏனெனில் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவீத வரி விதித்தார். அதன் பின் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அது இந்தியா மீதான வரியை அமெரிக்கா 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.

அதோடு இனிமேல் ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது எனவும் டொனால்ட் டிரம்ப கூறினார்.. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் போர் நடைபெற்று வருவதால் கச்சா எண்ணெய் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

மேலும் கச்சா எண்ணெய் விநியோகமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே 30 நாட்கள் ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் என அமெரிக்கா அனுமதி கொடுத்தது. இந்தியாவுக்கு அமெரிக்கா என்ன அனுமதி கொடுப்பது?. பிரதமர் நரேந்திர மோடி ஏன் அமைதியாக இருக்கிறார்?.. என காங்கிரஸ் விமர்சித்து வருகிறது.

இந்நிலையில் ரஷ்யா தனது கச்சா எண்ணெய் விலையை கணிசமாக உயர்த்தியிருக்கிறது. இதுவரை இந்தியாவிற்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்கி வந்த ரஷ்யா தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளி வந்திருக்கிறது. போர் மூலமாக ஏற்பட்ட நெருக்கடியை பயன்படுத்தி எரிசக்தி மூலம் வருவாய் ஈட்ட ரஷ்யா திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த