நடிகை ராஷ்மிகா மந்தனாவின் தாய் சுமன் மந்தனா, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அளித்த பழைய நேர்காணலின் ஆடியோ கிளிப் தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஷ்மிகா மற்றும் நடிகர் ரக்ஷித் ஷெட்டி இடையிலான முறிந்த நிச்சயதார்த்தம் குறித்து சுமன் மந்தனா அந்த நேர்காணலில் பேசியிருந்தார். பிப்ரவரி 26 அன்று விஜய் தேவரகொண்டாவுடனான ராஷ்மிகாவின் திருமணத்திற்கு பிறகு, இந்த பழைய ஆடியோ திட்டமிட்டே பரப்பப்படுவதாக கூறப்படுகிறது.
அந்த ஆடியோவில், ரக்ஷித் ஷெட்டி ராஷ்மிகாவின் திரையுலக முடிவுகளை கட்டுப்படுத்த முயன்றதாகவும், திருமணத்திற்கு பிறகு நடிப்பை விட்டுவிடுவதாக ராஷ்மிகாவை அறிவிக்க சொல்லி வற்புறுத்தியதாகவும் சுமன் மந்தனா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ள ராஷ்மிகா, “கடந்த எட்டு ஆண்டுகளாக என் மீது நடத்தப்படும் அவதூறு பிரசாரங்களின் ஒரு பகுதியாக இது உள்ளது. ஒருவரின் தனிப்பட்ட உரையாடலை அனுமதியின்றி வெளியிடுவது அநாகரிகமானது,” என தெரிவித்துள்ளார். மேலும், இந்த வீடியோவை அடுத்த 24 மணி நேரத்திற்குள் நீக்காத பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் ஊடகங்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

