இந்தியா

மம்தா பானர்ஜியின் மொத்த திட்டமும் காலி.. தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை..!

மேற்கு வங்கத்தில் நேர்மையான மற்றும் அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதை உறுதி செய்யும் பொருட்டு, இந்திய தேர்தல் ஆணையம் அம்மாநில காவல்துறையில் மேற்கொண்டுள்ளது.

முதல்வர் மம்தா பானர்ஜியின் ‘சிண்டிகேட்’ முறையை இந்த இடமாற்றங்கள் உடைத்துள்ளதாகவும், மம்தா பானர்ஜி தனக்கு சாதகமான அதிகாரிகளை முக்கிய பொறுப்புகளில் அமர்த்தி, அதன் மூலம் வன்முறையை தூண்ட முயல்வதாகவும் கூறப்பட்ட நிலையில் மம்தா பானர்ஜியின் மொத்த திட்டத்தையும் தேர்தல் ஆணையம் மூலம் மத்திய அரசு காலி செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி நடவடிக்கையின்படி, மாநில காவல்துறை டிஜிபி-யாக சித்த நாத் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கொல்கத்தா காவல் ஆணையராக அஜய் குமார் நந்த் நியமிக்கப்பட்டுள்ளார். பிர்பூம், கூக்பெஹார் உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களுக்கும் புதிய எஸ்பி-க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மம்தா பானர்ஜியின் பிடியிலிருந்து காவல்துறையை விடுவித்து, நல்ல பின்னணி கொண்ட அதிகாரிகளை கொண்டு வந்திருப்பது தேர்தல் முறைகேடுகளைத் தடுக்கும் என பாஜக பிரமுகர் ராகுல் சின்கா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று, மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்