ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து தாக்கி வருவதால் இந்தியாவிலுள்ள பல நாடுகளிலும் கச்சா எண்ணெய் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் பல உணவகங்கள் மூடப்பட்டிருக்கிறது. திறக்கப்பட்டிருக்கும் உணவகங்களிலும் விலைகள் தாறுமாறாக உயர்த்தப்பட்டிருக்கிறது .எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பலரும் வேலை இழந்திருக்கிறார்கள். நாடு முழுவதும் பல கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு கச்சா எண்ணெய் தட்டுப்பாடு என்கிற செய்தி வெளியானவுடனேயே பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. அதேநேரம் சமையல் சிலிண்டர் விலை மட்டும் ரூ.20 உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், இன்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி ‘5 மாநில தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலைகளை பாஜக அரசு உயர்த்திவிடும்.. எரிபொருள் பிரச்சனை சமாளிக்க மோடி அரசிடம் எந்த ஒரு திட்டமிடலும் இல்லை’ எனக் கூறியிருக்கிறார்..
மேலும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 100ஐ நோக்கி சரிந்து வருவதும், தொழில் துறைக்கான டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதும் வரவிருக்கும் விலைவாசி உயர்வின் அறிகுறியே. இதன் எதிரொலியால் உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கும்.. சிறு குறு தொழில்கள் பாதிக்கப்படும் எனவும் ராகுல் தெரிவித்திருக்கிறார்.

