தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய இயக்குனர் என்றால் அது பாரதிராஜாவை சொல்லலாம். இவர் இயக்கிய 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, புதுமைப்பெண், முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே போன்ற படங்கள் ரசிகரக்ளிடம் பெரும் வரவேற்பை பெற்றதோடு தமிழ் சினிமாவில் சிறந்த படங்களாக இப்போதும் இருக்கிறது.
திரைப்படங்களை இயக்கி வந்த பாரதிராஜா ஒரு கட்டத்தில் வயது மூப்பு காரணமாக சினிமாவில் வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார். தொடர்ந்து பல படங்களிலும் அவர் நடித்துவந்த நிலையில்தான் அவரின் மகன் மனோஜ் திடீரென மாரடைப்பில் இறந்து போனார்.. மகனை இழந்த துக்கம் காரணமாக மனம் மற்றும் உடல்நிலை இரண்டுமே பாரதிராஜாவுக்கு பாதிக்கப்பட்டது. எனவே கடந்த சில வருடங்களாகவே பாரதிராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில்தான், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் தற்போது வெளியாகியிருக்கிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் பாரதிராஜா விரைவில் நலம் பெற்று ஆரோக்கியத்துடன் திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக பதிவிட்டு வருகிறார்கள்.

