இந்தியா

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மூன்று மொழிகள் கட்டாயம்.. 2031 முதல் அமல்படுத்த திட்டம்..!

தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி பள்ளி பாடத்திட்டத்தில் அதிரடி மாற்றங்களை சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, 2031-ஆம் ஆண்டு முதல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மூன்று மொழிகளை கற்பது கட்டாயமாக்கப்படும்.

2026-27 கல்வியாண்டு முதல் 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மூன்றாவது மொழி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மொழிகள் மட்டுமின்றி, கலை, தொழிற்கல்வி மற்றும் உடற்கல்வி ஆகியவையும் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளன. மேலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் கணினி சிந்தனை சார்ந்த பாடங்கள் 2029- முதல் பொதுத்தேர்வில் இடம்பெறும்.

கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் மாணவர்கள் தங்கள் திறமைக்கேற்ப ‘அட்வான்ஸ்டு’ முறையை தேர்வு செய்யும் வசதியும் அறிமுகமாகிறது. இந்த மாற்றங்கள் மாணவர்களின் பன்மொழித் திறன் மற்றும் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளன.

சிபிஎஸ்இ-யின் இந்த புதிய பாடத்திட்ட வரைவு 2031-க்குள் முழுமையாக நடைமுறைக்கு வரும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்