விளையாட்டு

SRH ஜெயித்தாலும் அபிஷேக் சர்மாவுக்கு அபராதம்.. கடும் எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ..!

ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் அபிஷேக் சர்மாவுக்கு பிசிசிஐ கடும் அபராதம் விதித்துள்ளது.

இந்த ஆட்டத்தில் 21 பந்துகளில் 48 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட அபிஷேக், களத்தில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.3-ன் கீழ், ஆபாசமான அல்லது அவதூறான மொழியை பயன்படுத்தியதை அவர் ஒப்புக்கொண்டார். இதற்காக அவரது போட்டி ஊதியத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு தகுதியிழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில் ஐதராபாத் அணி 226 ரன்கள் குவித்து, கேகேஆர் அணியை 161 ரன்களில் சுருட்டி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு சீசனில் சன்ரைசர்ஸ் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்தாலும், களத்தில் ஒழுக்கத்தை மீறியதற்காக அபிஷேக் சர்மா இந்த தண்டனைக்கு உள்ளாகியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்