இலங்கை

வடக்கு ரயில் சேவைகள் அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பம்!

கடந்த ஆண்டு டித்வா புயலால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதையின் சீரமைப்புப் பணிகளை தற்சமயம் நிறைவு பெற்றுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு அமைவாக, கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம், காங்கேசன்துறைக்கு இடையிலான ரயில் சேவை எதிர்வரும் ஏப்ரல் 9 ஆம் ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த சேவை மீண்டும் தொடங்கப்படுவதால், கொழும்புக்கும் வட மாகாணத்திற்கும் இடையே வழக்கமான ரயில் இணைப்பு மீண்டும் நிலைநாட்டப்படும் என்றும் ரயில்வே திணைக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அதேநேரம், தினமும் காலை 5:15 மணிக்கு கல்கிஸையில் இருந்து காங்கேசன்துறைக்கும், பிற்பகல் 1:50 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து கல்கிஸைக்கும் இயக்கப்படும் நகரங்களுக்கு இடையேயான விரைவு ரயில்களுக்கான ஆசன முன்பதிவு வசதிகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை

விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான கிழக்கு மாகாண, காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில்
இலங்கை

மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்த கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04.11.2025) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்