ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
மழையினால் 11 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில், வெறும் 14 பந்துகளில் 39 ரன்களை குவித்து வைபவ் அசத்தினார். குறிப்பாக, உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவின் ஒரே ஓவரில் இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டு தனது பயமற்ற ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து அவர் அமைத்த அதிரடி தொடக்கம், ராஜஸ்தான் அணி 150 ரன்களை எட்ட உதவியது.
இந்த போட்டியில் மும்பை அணி தோல்வியை தழுவினாலும், அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆட்டத்திற்கு பிறகு வைபவ் சூர்யவன்ஷியை நேரில் சந்தித்து பாராட்டிய விதம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. “இவ்வளவு இளம் வயதில் இத்தகைய பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவது ஆச்சரியமாக இருக்கிறது, அவருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது” என பாண்டியா மனதார பாராட்டினார்.
பாண்டியாவின் இந்த செயலை அடுத்து அவர் தான் இந்த போட்டியின் ரியல் வின்னர் என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இறுதியில், ராஜஸ்தான் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொண்ட வைபவ்வின் துணிச்சல், இந்த சீசனின் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

