இந்தியா

அலாரமாக மாறிய Zepto சேவை: ஒரு சுவாரஸ்யமான சம்பவம்!

மும்பையை சேர்ந்த ரிஷப் அகர்வால் என்பவர், தனது தங்கையை சரியான நேரத்தில் எழுப்ப ஒரு வினோதமான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
அவரது தங்கை அதிகாலை விமானத்தை பிடிக்க வேண்டியிருந்த நிலையில், அவர் தனது செல்போனில் வைத்த 3 மணி அலாரம், போன் ‘சுவிட்ச் ஆஃப்’ ஆனதால் அடிக்கவில்லை. தங்கை தூங்கிவிடுவார் என்ற பயத்தில், அவரை எழுப்ப ரிஷப் ஒரு புதுமையான வழியை கையாண்டார்.
அவர் Zepto என்ற டெலிவரி நிறுவனத்தை அணுகி, உணவு பொருட்களை ஆர்டர் செய்து, அதன் மூலம் டெலிவரி ஊழியரை தங்கையின் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். சுமார் 40 நிமிடங்கள் பயணம் செய்து அந்த ஊழியர் வீட்டு கதவை தட்டி தங்கையை எழுப்பியுள்ளார்.
இந்த வினோதமான ஐடியா மூலம் அவரது தங்கை சரியான நேரத்தில் விமான நிலையத்தை அடைய முடிந்தது. அவசர தேவைக்கு டெலிவரி செயலியை அலாரமாக பயன்படுத்திய இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்