2026 டி20 உலகக் கோப்பையில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் மோதல் இன்று கொழும்பில் நடைபெற உள்ளது. ஆனால், கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டிக்கு மழை மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.
வானிலை அறிக்கையின்படி, இன்று கொழும்பில் மழை பெய்ய 94 சதவீத வாய்ப்பு உள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இலங்கையில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
லீக் போட்டி என்பதால், இதற்கு ‘ரிசர்வ் டே’ கிடையாது. ஒருவேளை மழை காரணமாக ஆட்டம் முற்றிலும் கைவிடப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்படும்.
கொழும்பில் நிலவும் கணிக்க முடியாத வானிலையால் ஆட்டம் நடக்குமா என்ற கவலையில் ரசிகர்கள் உள்ளனர். டாஸ் போடும் சமயத்தில் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதால், மைதான ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். இந்த முக்கிய ஆட்டத்தில் புள்ளி பகிர்வு என்பது இரு அணிகளின் அரையிறுதி வாய்ப்பை பாதிக்கும் என கூறப்படுகிறது.

