விளையாட்டு

சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தகுதி..!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான டி20 போட்டியில், பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தொடக்க வீரர் இஷான் கிஷனின் அதிரடி ஆட்டத்தால் (77 ரன்கள்) 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் 32 ரன்கள் எடுத்து பலம் சேர்த்தார்.

176 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. முதல் இரண்டு ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்த அந்த அணி, 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இது பாகிஸ்தான் அணியின் இரண்டாவது மிக மோசமான தோல்வியாக பதிவாகியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் விளையாடிய 3 போட்டிகளிலும் வென்று, குரூப் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்த இந்தியா, சூப்பர் 8 சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்