கர்நாடக பாஜக எம்.எல்.ஏ பைரதி பசவராஜ், ரியல் எஸ்டேட் அதிபர் ‘பிக்லு’ சிவா கொலை வழக்கில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. “ஒரு மக்கள் பிரதிநிதியாக விசாரணையை எதிர்கொள்ளும் தைரியம் இருக்க வேண்டும்” என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு தெரிவித்தது. மேலும், அவர் சரணடைந்து வழக்கமான ஜாமீன் கோருமாறும் அறிவுறுத்தியது.
பெங்களூருவில் பிக்லு சிவா சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், பசவராஜ் ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கர்நாடக உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்ததை தொடர்ந்து, அவர் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால், குஜராத்திலிருந்து பெங்களூரு திரும்பும் அவரை விமான நிலையத்திலேயே கைது செய்ய சிஐடி அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.
சொத்துத் தகராறு காரணமாக நடைபெற்ற இந்த சதித் திட்டத்தில் எம்.எல்.ஏ-வுக்கு தொடர்பிருப்பதாக கூறப்படும் ஆதாரங்களை சிஐடி திரட்டியுள்ளது. இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

