இந்தியா

சென்னையில் இன்று முதல் கண்டக்டர் இல்லாத சொகுசி ஏசி பேருந்து.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில், ‘பிரீமியம்’ மின்சார பேருந்து சேவையை இன்று அறிமுகம் செய்துள்ளது.

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்த இந்த சேவை, முதற்கட்டமாக கோயம்பேடு – சிறுசேரி மற்றும் கிளாம்பாக்கம் – திருவான்மியூர் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளது.

டெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களைப் பின்பற்றி அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தப் பேருந்துகளில், நடத்துநர் இல்லா டிஜிட்டல் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் ‘சென்னை ஒன்’ செயலி மூலம் மட்டுமே தங்களின் இருக்கைகளை முன்பதிவு செய்ய முடியும்.

சொகுசு இருக்கைகள், குளிர்சாதன வசதி, இலவச வைஃபை மற்றும் நவீன பாதுகாப்பு அம்சங்கள் இந்தப் பேருந்தின் தனிச்சிறப்பாகும். மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக இருக்கைகளும் இதில் அமைக்கப்பட்டுள்ளன. பயணக் கட்டணமாக ரூ. 50 முதல் ரூ. 150 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சொகுசு பயணத்தை விரும்புவோருக்கு இது சிறந்த மாற்றாக அமையும். இந்த சேவையின் வரவேற்பை பொறுத்து, சென்னையின் மற்ற பகுதிகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்று எம்டிசி தெரிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்