இந்தியா

ஆந்திராவை தொடர்ந்து பீகாரிலும் கொரோனா.. தந்தை மகள் மருத்துவமனையில் அனுமதி…

ஆந்திரபிரதேசத்தை தொடர்ந்து பீகாரிலும் தந்தை மற்றும் மகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் மீண்டும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆந்திராவில் இரண்டு பேருக்கு இந்நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், தற்போது பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயது தந்தை மற்றும் அவரது 35 வயது மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களில் பதிவாகியுள்ள இந்த தொற்று பரவலை தொடர்ந்து, இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வைரஸ் பரவாமல் தடுத்துட தேவையான நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறையினர் நிலைமையை மிகவும் நெருக்கமாகக் கண்காணித்து வருவதுடன், பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த காலங்களைப் போல பெருந்தொற்று மீண்டும் பரவாமல் இருக்க மருத்துவத்துறையினர் பல்வேறு முற்காப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்