உலகம்

இந்தியா, சீனா மீது 100 சதவீத வரி!.. அமெரிக்க செனட் சபையில் நிறைவேறியது!..

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பொறுப்பேற்ற பின் பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு அதிக அளவு இறக்குமதி வரிகளை விதித்தார். ஒருகட்டத்தில் வரிகளை ஏற்றிக்கொண்டே போனார்.

ஆனால், டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் கண்டித்தது. அதன்பின் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இந்தியாவுக்கான இறக்குமதி வரியை டிரம்ப் குறைத்தார்.

இந்நிலையில், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா சீனா இரண்டு நாடுகளுக்கும் 100 சதவீத கூடுதல் வரியை விதிக்கும் முயற்சியில் டிரம்ப் இறங்கியிருக்கிறார். இது தொடர்பாக புதிய மசோதாவை அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த புதிய மசோதா அமெரிக்க செனட் சபையின் நடைமுறை வாக்கெடுப்பில் நிறைவேறியிருக்கிறது. அமெரிக்கா சென்ற உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி முன்னிலையில் கொண்டுவரப்பட்ட இந்த மசோதா அமெரிக்காவின் இரு கட்சிகளின் ஆதரவுடன் சட்டமாவதற்கான முதல் படியை எட்டியிருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த