விளையாட்டு

இந்தியா – பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா – இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும், நடப்புச் சாம்பியனான இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

துபாயில் நடைபெறும் இப்போட்டியில் இரு அணிகளுக்கும் இடையேயான பலப்பரீட்சை சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்புத் தொடரில் தீப்தி சர்மா தலைமையிலான இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளனர், இலங்கை அணி 25 விக்கெட்டுகளுடன் அடுத்த இடத்தில் உள்ளது.

இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், இலங்கை அணியின் பேட்டிங் வரிசை சற்று தடுமாற்றத்தையே சந்தித்துள்ளது. கேப்டன் சாமரி அத்தபத்து மற்றும் இமேஷா துலானி ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் குவிக்கவில்லை என்றாலும், அரையிறுதிப் போட்டிகளில் ஹர்ஷிதா சமரவிக்ரமாவின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மேலும், கடந்த கால புள்ளிவிவரங்களின்படி இந்தியா வலுவான நிலையில் இருந்தாலும், 2024 இறுதிப் போட்டியில் இலங்கையிடம் இந்தியா தோற்றது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுமே கோப்பையை வெல்ல தீவிரமாக இருப்பதால், இன்றைய இறுதிப் போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்