உலகம்

கச்சா எண்ணெய் விலை உயர்வு!.. 17.2 கோடி பேரலை இறக்கும் அமெரிக்கா!…

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்து சில நாட்களாக போர் தொடுத்து வரும் நிலையில் ஈரான் வளைகுடா நாடுகளை தாக்கி வருகிறது. அதன் காரணமாக உலகெங்கும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவுகிறது.. ஏனெனில், வளைகுடா நாடுகளிலிருந்து ஈரானில் ஹோர்மூஸ் நீரிணை வழியாகத்தான் உலக நாடுகளுக்கு எண்ணெய் கப்பல்கள் கொண்டு வரப்படுகிறது.

ஆனால் ஹோர்மூஸ் ஜலசந்தியை ஈரான் அரசு மூடிவிட்டதால் இந்தியாவில் உள்ள பல நாடுகளுக்கும் எண்ணெய் கப்பல்கள் வந்து சேரவில்லை.. இதன் காரணமாக இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலும் கேஸ் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுகிறது.

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் வணிக சிலிண்டர் கிடைக்காத காரணத்தால் ஹோட்டல்கள் மூடப்பட்டிருக்கிறது.. ஒருபக்கம், தட்டுப்பாடு காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவின் அவசர கையறுப்பில் இருக்கும் 17.2 கோடி பேரல் எண்ணையை விடுவிக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார்.

அமெரிக்கா மொத்தமாக 71 கோடி பேரல் கச்சா எண்ணையை சேமிக்க முடியும்.. தற்போது 41 கோடி பேரல் அமெரிக்காவின் கையிருப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த